For Daily Alerts
Just In
தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு: ஜெ. திறந்து வைத்தார்
சென்னை:
ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி வாரியத்திற்குச்சொந்தமான புதிய குடியிருப்பு கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
சென்னை-ஈ.வெ.ரா. சாலையில் கட்டப்பட்டுள்ள இந்த மூன்று மாடிக் கட்டடத்தை இன்று காலைஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும் போலீஸ் வீட்டு வசதி வாரியத்திற்கான புதிய இணைய தளத்தையும் ஜெயலலிதா இன்றுதொடங்கி வைத்தார்.
இன்று நடைபெற்ற இந்த விழாவில் தமிழக டி.ஜி.பி. ராஜகோபாலன், உள்துறை செயலாளரானசையத் முனீர் ஹேடா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த 1980ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி வாரியம் இதுவரை16,000 வீடுகளை போலீசாருக்காகக் கட்டிக் கொடுத்துள்ளது.
-->
Comments
Story first published: Monday, March 3, 2003, 5:30 [IST]