For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புகை..... பா.ம.கவுக்குப் பகை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசு தடை செய்த பின்னரும் கூட பொது இடங்களில் ஏராளமானவர்கள் புகைபிடிப்பதாகவும் அதைத் தடுக்க போலீசாரும் அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுகூறி பாட்டாளி மக்கள் கட்சியின மகளிர் அணியினர் போராட்டம் நடத்தினர்.

பொது இடங்களில் புகை பிடிப்பதை கடந்த ஆண்டு தமிழக அரசு தடை செய்தது. ஆனால் "புகைமன்னர்கள்" இதைக் கண்டு கொள்ளவில்லை. ஆரம்பத்தில் பாக்கெட் செலவுக்காக போலீசாரும் புகைபிடிப்பவர்களை பிடித்து வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு விட்டு வந்தனர்.

இப்போதெல்லாம் போலீசாரும் இதைக் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனால்வழக்கம்போல் தியேட்டர்கள், பஸ் நிலையங்கள் என தடை செய்யப்பட்ட இடங்களில் எல்லாமேபுகை மூட்டம் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் பொது இடங்களில் புகை பிடிப்பதை எதிர்த்து பாமக சார்பில் இன்று சென்னையில்போராட்டம் நடத்தப்பட்டது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்து உள்ள மெமோரியல் ஹால் அருகே பாமக மகளிர் அணியினர்இந்தப் போராட்டத்தை நடத்தினர். புகை பிடிப்பதை எதிர்த்து அவர்கள் பல்வேறு கோஷங்களையும்எழுப்பினார்கள்.

அதில் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி பேசியதாவது:

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக பீடி, சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.தெற்காசியாவிலேயே புகைபிடிக்கும் சதவீதம் வேகமாக அதிகரித்து வருவதும் தமிழகத்தில் தான்.

பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்ற தமிழக அரசின் தடை உத்தரவு இன்னும் அமலில்உள்ளது. ஆனால் இந்தத் தடை தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. இந்தத் தடையை முழுமையாகஅமலாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பீடி, சிகரெட் விளம்பரங்களுக்கும் தடை செய்ய வேண்டும் என்றார் மணி.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X