இந்தியா வந்தார் ஆப்கானிஸ்தான் அதிபர்
டெல்லி:
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து தலிபான் பயங்கரவாதிகளை அமெரிக்கா விரட்டியடித்த பின்னர்அந்நாட்டின் அதிபராக கர்சாய் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே கர்சாய் இந்தியாவுக்கு வந்தார்.
போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா ஏராளமான உதவிகளை அளித்து வருகிறது.ஏற்கனவே பல லட்சம் டன் கோதுமைகளையும் அந்நாட்டுக்கு இந்தியா வழங்கியுள்ளது. பலவிமானங்களையும், நூற்றுக்கணக்கான பஸ்களையும் இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது.
இந்நிலையில் கர்சாய் தற்போது இந்தியாவுக்கு மீண்டும் வந்துள்ளார். டெல்லியில் ஜனாதிபதிமாளிகையில் கர்சாய்க்கு மிக உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம், பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த்சின்ஹா உள்ளிட்ட தலைவர்கள் கர்சாயை வரவேற்றனர்.
இந்தியத் தலைவர்களுடன் நான்கு நாட்கள் மிக விரிவான பேச்சுக்களை கர்சாய் நடத்தவுள்ளார்.போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானை முழு அளவில் மறுசீரமைக்க தேவையானஉதவிகளை வழங்குமாறு அவர் இந்தியத் தலைவர்களைக் கேட்டுக் கொள்வார்.
ஆப்கான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக இந்தியா மேலும் ஒரு ஏர்பஸ் விமானத்தை அன்பளிப்பாகஅளிக்கவுள்ளது. அந்த விமானத்தை நாளை முறைப்படி இந்தியாவிடமிருந்து கர்சாய் பெற்றக்கொள்வார்.
ஹிமாச்சல் பல்கலைக்கழகத்தில் தான் ஹமித் கர்சாய் உயர் கல்வி பயின்றார் என்பதுகுறிப்பிடத்தக்கது. ஹிமாச்சலுக்கும் செல்ல இருக்கும் அவர் தனது பழைய பல்கலைக்கழக நண்பர்களைச்சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications