For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர்: முஷாரப்புக்கு புஷ் நெருக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப்பை அமெரிக்க அதிபர்ஜார்ஜ் புஷ் வற்புறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் பிரதமர் வாஜ்பாயை தொலைபேசியில் அழைத்துப் பேசியபோது, பாகிஸ்தான்எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்பதைத் தெளிவு படுத்தினார்.

காஷமீர் விவகாரத்தில் முஷாரபை நெருக்கினால் தான் ஈராக் விஷயத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம் என அமெரிக்காவிடம் இந்தியா கூறிவிட்டது.

இதையடுத்து முஷாரப்பை புஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போதுகாஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு முஷாரப்பை புஷ் வற்புறுத்தினார்.

மேலும் ஈராக் விவகாரம் தொடர்பாகவும் புஷ்சும் முஷாரப்பும் பேச்சு நடத்தினார்கள். ஈராக்கைத்தாக்கத் திட்டமிட்டுள்ள தங்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் எனவும்முஷாரபுக்கு புஷ் நெருக்குதல் கொடுத்தார். நெருக்குதலுக்கு முஷாரபும் பணிந்துவிட்டதாகத்தெரிகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X