For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலூர் அருகே சத்துணவு சாப்பிட்ட 45 மாணவ, மாணவிகள் மயக்கம்

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் என்ற ஊருக்கு அருகே உள்ள பேதங்குப்பம் கிராமத்தில் சத்துணவுசாப்பிட்ட 45 மாணவ, மாணவிகள் மயக்கமடைந்தனர். அவர்களில் 4 பேர் கவலைக்கிடமாகஉள்ளனர்.

பேதங்குப்பத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் நேற்று மதியம் வழக்கம் போல சத்துணவுவழங்கப்பட்டது.

ஆனால் இதைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 45 மாணவ, மாணவிகள் அடுத்தடுத்து வாந்திஎடுத்தனர். சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டது.

அவர்கள் அனைவரும் உடனடியாக கடலூர் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகடாக்டர்கள் தெரிவித்தனர்.

பல்லி விழுந்த சாம்பாரை சோற்றில் கலந்து சாப்பிட்டதால்தான் மாணவ, மாணவிகளுக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X