ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து கைதி "எஸ்கேப்"
புதுக்கோட்டை:
தப்பித்தால் போதும் என்ற ஒரே நோக்கத்துடன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடும்பஸ்ஸிலிருந்து குதித்துத் தப்பினார் ஒரு கைதி.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சந்துரு. வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அவர்.
புதுக்கோட்டையில் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு சந்துரு அழைத்து வரப்பட்டிருந்தார்.அவருடன் மேலும் நான்கு பேரும் கொண்டு வரப்பட்டிருந்தனர்.
விசாரணைக்குப் பின்னர் மீண்டும் திருச்சிக்கு கொண்டு செல்வதற்காக கைதிகளுடன் உடன் வந்தபோலீஸார் பஸ்ஸில் ஏறினர்.
அந்த பஸ் கிளம்பி சிறிது தூரம் சென்றதும் ஓடும் பஸ்ஸிலிருந்து சந்துரு மட்டும் திடீரென்று குதித்துத்தப்பினார்.
இதைச் சற்றும் எதிர்பாராத போலீசார், பஸ்சை நிறுத்தி விட்டு புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில்புகார் கொடுத்தனர். தப்பி ஓடிய சந்துருவைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications