பவானி அணை: கோவையில் ராமதாஸ் போராட்டம்
கோயம்புத்தூர்:
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டிக் கொண்டிருப்பதைக் கண்டித்துகோயம்புத்தூரில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் இருந்து ஓடும் பவானி நதியின் குறுக்கே கேரள அரசு முக்காலி என்னும் இடத்தில்தடுப்பணை ஒன்றைக் கட்டி வருகிறது. இதை தமிழக அரசும் விவசாயிகளும் அனைத்துக் கட்சிகளும்கடுமையாக எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அந்த அணையைப் பார்வையிடச் சென்ற தமிழக விவசாயிகளையும் நிருபர்களையும்ரெளடிகளுடன் சேர்ந்து கொண்டு கேரளப் போலீசார் பயங்கரமாகத் தாக்கினர். கடந்த மாதம் நடந்தஇந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கோயம்புத்தூரில் ராமதாஸ் தலைமையில் இன்று காலை போராட்டம் நடைபெற்றது.இந்தப் போராட்டத்தில் சுமார் 150 பா.ம.கவினர் கலந்து கொண்டனர்.
அப்போது கேரள அரசைக் கண்டித்து பாமகவினர் கோஷங்களை எழுப்பினார்கள். தமிழகவிவசாயிகள் மற்றும் நிருபர்கள் மீது கேரள போலீசார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும்கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பவானி அணை விவகாரத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லைஎன்று போராட்டத்தின்போது பேசிய ராமதாஸ் குறிப்பிட்டார்.
மேலும் இது அமைச்சர்களே பேசி முடிக்க வேண்டிய சாதாரண விவகாரம் அல்ல என்றும் முதல்வர்ஜெயலலிதாவே நேரடியாக திருவனந்தபுரம் சென்று கேரள முதல்வர் ஆண்டனியிடம் பேச்சு நடத்தவேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.
வீராணம்: கடலூரில் 8ம் தேதி போராட்டம்:
இதற்கிடையே புதிய வீராணம் திட்டத்தைக் கண்டித்து கடலூரில் டாக்டர் ராமதாஸ் தலைமையில்பாமகவினர் போராட்டம் நடத்தவுள்ளனர்.
இது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே. மணி விடுத்துள்ள அறிக்கையில், புதிய வீராணம்திட்டத்தால் சென்னைக்கு குடிநீர் கிடைக்கும் வாய்ப்பே இல்லை.
ஆனால் வீராணம் ஏரியை நம்பி விவசாயம் செய்து கொண்டிருக்கும் விவசாயிகள்தான்பாதிக்கப்படுவார்கள். எனவே இந்தத் திட்டத்தைக் கைவிடக் கோரி கடலூரில் டாக்டர் ராமதாஸ்தலைமையில் வரும் 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதில் ஆயிரக்கணக்கான பாமக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று அவ்வறிக்கையில்கூறியுள்ளார் மணி.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications