அதிமுகவினர் மீதான தாக்குதல்: வைகோவுக்கு காவல் நீட்டிப்பு
நாகப்பட்டினம்:
மயிலாடுதுறையில் அதிமுகவினர் மீது தாக்குதல் நடந்தது தொடர்பான வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை வரும் ஏப்ரல் 11ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க நாகப்பட்டினம்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் மயிலாடுதுறை சட்டசபைத் தேர்தலின் போது திமுக மற்றும்அதிமுகவினருக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக அப்போது திமுகவில் இருந்த வைகோ மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அந்த வழக்கு தற்போது நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வைகோ தவிர திமுகமுன்னாள் அமைச்சர் கோ.சி. மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இடும்பையன்உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவர வைகோ மறுத்துவிட்டதால் அவரது சிறைக் காவல்நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் ஆஜராவதற்காக வைகோ இன்று காலை பலத்த பாதுகாப்புடன் வேலூர்சிறையிலிருந்து நாகப்பட்டினம் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சிசுந்தரம் ஏப்ரல் 11ம் தேதி வரை வைகோவின் சிறைக் காவலைநீட்டித்து உத்தரவிட்டார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையையும் அதே தேதிக்கு ஒத்திவைத்தார்.
கைதான மதிமுக பிரமுகருக்கு மூல வியாதி:
இதற்கிடையே பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளமதிமுக பிரமுகர் செவந்தியப்பன் மூல வியாதி காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
செவந்தியப்பன் மூல வியாதியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். சிறையிலேயே அவருக்குஇதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தொடர்ந்து அவருக்கு வலி அதிகமாகவே அவரை மதுரை அரசு ராஜாஜிமருத்துவமனையில் சேர்க்க சிறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. செவந்தியப்பன் இருக்கும் மருத்துவமனை அறையைச் சுற்றிலும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-->