கண்ணி வெடியில் சிக்கி வேலூர் ராணுவ வீரர் சாவு: ஜெ. ரூ.5 லட்சம் உதவி
சென்னை:
காஷ்மீர் எல்லையில் கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான ராஜேந்திரன் காஷ்மீர் எல்லையில் பணியாற்றிவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் கண்ணிவெடியில் சிக்கி உடல் சிதறி பரிதாபமாகஉயிரிழந்தார்.
ராஜேந்திரனின் திடீர் மரணம் குறித்து ஜெயலலிதா ஆழ்ந்த வேதனையும் இரங்கலும்தெரிவித்துள்ளார். மேலும் ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்கவும், அவருடையகுடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை அளிக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இன்று வேலூரில் நடைபெறும் ராஜேந்திரனின் இறுதிச் சடங்கில் தமிழக அரசின் சார்பில்ஊரகத் தொழில் துறை அமைச்சர் வடிவேல் கலந்து கொள்வார் என்று அந்தச் செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications