நாமக்கல்லில் எடைக்கு எடை விற்கப்படும் முட்டைகள்!
நாமக்கல்:
அதிகரித்த உற்பத்தி, குறைந்த பயன்பாடு ஆகியவை காரணமாக நாமக்கல் பகுதியில் முட்டைகள்விற்பனை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அங்கு முட்டைகள் எடைக்கு எடை போட்டுவிற்கப்படுகின்றன.
தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திலிருந்து சமீபத்தில் முட்டை விலக்கிக் கொள்ளப்பட்டது.தமிழகம் முழுவதிலும் உள்ள சத்துணவு மையங்களில் முன்பு வாரந்தோறும் 22 லட்சம் முட்டைகள்பயன்படுத்தப்பட்டு வந்தன.
இதைத் தொடர்ந்து முட்டை உற்பத்தி அதிகமாக இருந்தும் அவற்றின் பயன்பாடு மிகவும் குறைந்துவிட்டது. இதனால் நாமக்கல்லில் முட்டைகள் அதிகமாகத் தேங்க ஆரம்பித்து விட்டன.
நிலைமை இப்படியே போனால் விற்பனை மிகவும் மோசமாகி விடும் என்பதை உணர்ந்த நாமக்கல்பகுதி முட்டை வியாபாரிகள், முட்டைகளை எடை போட்டு விற்க ஆரம்பித்துள்ளனர்.
ஒரு கிலோ முட்டையின் விலை ரூ.19 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ என்பது 22முட்டைகள் வரை இருக்கும்.
ஆனால் தனியாக விற்றால் ஒரு முட்டை ரூ.1 வரை ஆகிறது. ஒரு கிலோ முட்டை ரூ.19 என்றுவிற்கும்போது, மார்க்கெட் விலையை விட 13 பைசா குறைத்தே விற்கப்படுவதாக முட்டைஉற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும் முட்டை தேங்க ஆரம்பித்து விட்டால் அழுகி, நாறிப் போய் விடும் என்பதால்தான்கிலோ கணக்கில் முட்டைகளை விற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல்தான் தமிழகத்திலேயே அதிக அளவில் முட்டை உற்பத்தி செய்யப்படும் பகுதி என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->