துபாய்க்கு ஹவாலா பணம் கடத்த முயற்சி: விஞ்ஞானி கைது
டெல்லி:
துபாய்க்கு ரூ.64 லட்சம் ஹவாலா பணத்தைக் கொண்டு செல்ல முயன்ற மூத்த விஞ்ஞானி ஒருவர்டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
மத்திய தடயவியல் ஆய்வகத்தில் மூத்த விஞ்ஞானியாகப் பணிபுரிபவர் சி.கே. ஜெயின். இவர்விமான நிலையத்தில் துபாய் செல்லும் விமானத்தில் ஏறி உட்கார்ந்திருந்தார்.
அவர் ஹவாலா கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக ஏற்கனவே வருமான அதிகாரிகளுக்குத் தகவல்கிடைத்திருந்தது.
இதையடுத்து அந்த விமானத்துக்குள் நுழைந்து ஜெயினிடம் திடீர் சோதனை நடத்தப்பட்டபோதுஅவர் ரூ.64 லட்சம் ரொக்கப் பணத்தை வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஜெயினிடம் துருவித் துருவி விசாரித்தபோதுதான் அவர் அந்நியச் செலாவணிமோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்தப் பணத்தை குவைத்துக்குக் கடத்த இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஜெயினை போலீசார் கைது செய்தனர். உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்உள்ள ஒரு அறிவியல் துறையின் மூத்த விஞ்ஞானி ஹவாலா மோசடியில் ஈடுபட்டுள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->