தமிழர்களுக்காக ஒன்று சேரும் தமிழக எம்.பிக்கள்: நாடாளுமன்றத்தில் ஆச்சர்யம்!
டெல்லி:
தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் கட்சிப் பாகுபாடின்றி அனைத்து தமிழக எம்.பிக்களும்நாடாளுமன்றத்தில் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்ததைக் கண்டு மற்ற உறுப்பினர்கள் மிகவும்ஆச்சர்யம் அடைந்தனர்.
இந் நிலையில் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்காகவும் அனைத்து தமிழ் எம்.பிக்களின் குரலும்சேர்ந்து ஒலித்து நாடாளுமன்றத்தை மீண்டும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தமிழகத்தில் உள்ள மைல் கற்களில் ஊர்ப் பெயர்கள் தமிழில்தான் எழுதப்பட வேண்டும் என்றுநேற்று முன்தினம் சில திமுக எம்.பிக்கள் மக்களவையில் வலியுறுத்தினர். இதை அதிமுகஉறுப்பினர்கள் உள்பட அனைத்துக் கட்சி தமிழக எம்.பிக்களும் வரவேற்றனர்.
இதை இந்தி பேசும் சில சமாஜ்வாடி உறுப்பினர்கள் எதிர்க்கவே உடனே அவர்களை அடிப்பதற்காகசில திமுக எம்.பிக்கள் பாய்ந்து சென்றனர். இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. சுமார் 15நிமிடங்கள் வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ் மொழிக்காக கட்சிப் பாகுபாடு காட்டாமல் அனைத்து தமிழக எம்.பிக்களும் ஒற்றுமையுடன்குரல் எழுப்புகின்றார்களே என்று மற்ற மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் மிகவும்ஆச்சர்யப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகத் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கிஅவர்களைக் கடத்திக் கொண்டும் செல்கின்றனர்.
இந்தப் பிரச்சனையும் நேற்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இது தொடர்பாக அதிமுகஎம்.பிக்களின் தலைவரான பி.எச். பாண்டியன் பேசும்போது, தமிழக மீனவர்களை இலங்கைமீனவர்கள் அடித்து இழுத்துச் செல்வதாகவும், இது தொடர்பாக மத்திய அரசு உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.
பாண்டியனின் இந்தக் கோரிக்கையை திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட அனைத்து தமிழகஎம்.பிக்களும் வரவேற்றுப் பேசினர். தமிழக மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் திமுக எம்.பியான விடுதலை விரும்பி தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களும்,மதிமுக எம்.பிக்களும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குச் சென்று அந்தத் துறை அமைச்சரானயஷ்வந்த் சின்ஹாவிடம் தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று கோரி மனுஒன்றையும் சமர்ப்பித்தனர்.
இது தொடர்பாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் அமைச்சரை அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த ஒற்றுமைக்கு பலனும் கிடைத்தது. இலங்கை அரசுடன் மத்திய அரசு விரைவாகத் தொடர்புகொண்டு, அந்நாட்டு சிறைகளில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கான பணிகள்துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.
-->












Click it and Unblock the Notifications