வேலூர் சிறையில் பார்வையாளர்களிடம் கெடுபிடி: வைகோ புகார்
நாகப்பட்டினம்:
வேலூர் மத்தியச் சிறையில் கைதிகளைச் சந்திக்க வரும் பார்வையாளர்களுக்கு ஏராளமானகட்டுப்பாடுகள் போடப்படுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் மயிலாடுதுறையில் அதிமுகவினரைத் திமுகவினர் தாக்கியதுதொடர்பான வழக்கில் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வைகோ நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
வேலூர் சிறையில் கைதிகளைப் பார்ப்பதற்காகத் தினமும் ஏராளமான பார்வையாளர்கள்வருவார்கள். கைதிகளைச் சந்தித்து பேசிவிட்டு அவர்கள் செல்வார்கள்.
ஆனால் கடந்த மூன்று நாட்களாக பார்வையாளர் சந்திப்புக்குக் கடுமையான கெடுபிடிகள்விதிக்கப்பட்டுள்ளன.
ஒரு கைதியைச் சந்திக்க ஒரு நாளைக்கு மூன்று பேர்தான் வர வேண்டும். 30 நிமிடங்கள்தான் பேசவேண்டும் என்று சிறை அதிகாரிகள் திடீர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
மேலும் நன்னடத்தை காரணமாக வேலூர் சிறையிலிருந்து மட்டும் தற்போது 600 கைதிகள்விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
நன்னடத்தை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற மனிதாபிமானம் கூட தமிழக அரசிடம் இல்லைஎன்றார் வைகோ.
-->