ஊர் பணத்தை பாழ்படுத்தும் ஜெ: இளங்கோவன் தாக்கு
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடருவதில் தீவிரமாகஇருப்பதாகவும், இது குறித்து விவாதிக்க காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் சென்னைக்குவரவழைக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் பேசிய அவர்,
சாத்தான்குளத்தில் பதவி, அதிகாரம், பணத்தை வைத்து அதிமுகவை வெல்லச் செய்தார் முதல்வர் ஜெயலலிதா. இதுமக்களால் கிடைத்த வெற்றியே அல்ல. இதை நிச்சயம் நீதிமன்றத்தில் முறையிடுவோம்.
ஜெயலலிதாவின் முறைகேடுகளை தேர்தல் கமிஷனே சுட்டிக் காட்டிவிட்டது. இதனால் நியாயம் எங்கள் பக்கம்தான் உள்ளது. அதிமுக வேட்பாளர் நீலமேகவர்ணம் வென்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்குத் தொடரஉள்ளோம்.
இது குறித்துப் பேச சாத்தான்குளம் காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரனை சென்னைக்கு வரவழைத்துள்ளோம்.
அரசு விழாக்களில் கடைக்குட்டி, செல்லக் குட்டி, முயல் குட்டி என்று கதை சொல்லி வருவதை ஜெயலலிதா நிறுத்திக்கொண்டு உருப்படியான கடைமைகளில் கவனம் செலுத்த வேண்டும். அறிவித்த திட்டங்களையே இன்னும்எத்தனை முறை தான் ஹெலிகாப்டரில் பறந்து போய் மீண்டும், மீண்டும் அறிவிப்பாரோ தெரியவில்லை. ஊர்ப்பணத்தை பாழ்படுத்தும் ஜெயலலிதாவை என்னவென்று சொல்வது என்றார் இளங்கோவன்.
புலிகள் மீது சோ.பா. புகார்:
இதற்கிடையே தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகளின் ஆதரவு கொண்ட இலங்கைத் தமிழ் மீனவர்கள் தான்தாக்கியதாகவும் கடத்தியதாகவும் காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் புகார் கூறியுள்ளார்.
காரைக்குடியில் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழக மீனவர்கள் கடத்தலில் புலிகளின் பின்னணி உள்ளது.அவர்களது ஆதரவு கொண்ட இலங்கை மீனவர்கள் தான் இந்தச் செயல்களில் ஈடுபட்டுள்னர்.
இந்தப் பிரச்சனையை தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கிளப்புவார்கள். இதற்காக எங்கள்தலைவர் சோனியா காந்தியின் அனுமதியைக் கோர உள்ளேன். இதற்காக அவரைச் சந்தித்துப் பேச டெல்லிசெல்கிறேன் என்றார்.
-->