13 ஆண்டுக்கு முன் ரூ.500 லஞ்சம்: 2 அதிகாரிகளுக்கு ஓராண்டு கடுங்காவல்
சென்னை:
500 ரூபாய் லஞ்சம் வாங்கிய 2 அரசு அதிகாரிகளுக்கு 1 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாமக்கல் வருவாய்த்துறையின் தாலுகா துணை ஆய்வாளராக இருந்தவர் ராமச்சந்திரன். அங்குபிர்கா சர்வேயராக இருந்தவர் செங்கோட்டையன்.
இருவரும் 13 ஆண்டுகளுக்கு முன் பணியின்போது ரூ.500 லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கில்இவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்இருவரும் அப்பீல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி தினகரன் இருவருக்கும் தலா 1 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதித்தார்.
"பல்லவன்" பணத்தை சுருட்டிய கேஷியர்:
இதற்கிடையே சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அண்ணாநகர் கிளையில் ரூ.1 லட்சம் வரைபண மோசடி செய்த கேஷியரைப் போலீசார் கைது செய்தனர்.
அண்ணாநகர் டிப்போவில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளப் பணம் ரூ.1 லட்சத்தை எடுத்துவர வங்கிக்குச் சென்றிருந்தார் கேஷியர் ஜெயபாலன். ஆனால் அவர் வெறும் கையுடன்தான்திரும்பினார்.
தான் பணத்தை எடுத்துக் கொண்டு வந்தபோது சிலர் வழிமறித்து தன்னிடமிருந்த ரூ.1 லட்சம்பணத்தையும் திருடிச் சென்றதாக தன் மேலதிகாரிகளிடம் அவர் கூறினார்.
இது குறித்து திருமங்கலம் போலீஸில் புகார் செய்யப்பட்டது. விசாரணை நடத்தியபோதுஜெயபாலனின் குட்டு வெளிப்பட்டது. பணத்தை இவரே மறைத்து வைத்து விட்டு, யாரோ திருடிவிட்டதாகக் கூறியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஜெயபாலன் கைது செய்யப்பட்டார்.
-->