தமிழர் விடுதலைப் படைத் தலைவர் நீதிமன்றத்தில் ஆஜர்
காரைக்குடி:
காரைக்குடி அருகே கல்லல் நகரில் நடந்த 2 கொலைகள் தொடர்பான வழக்கில் தமிழர் விடுதலைப் படையைச்சேர்ந்த ராஜாராமன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
கல்லல் நகரில் நடந்த இரண்டு கொலைகளில் ராஜாராமனுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸார் கூறுகின்றனர். இதுதொடர்பாக காரைக்குடி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதில் ஆஜர் செய்வதற்காக ராஜாராமனைபோலீஸார் பலத்த பாதுகாப்புடன் காரைக்குடிக்கு அழைத்து வந்தனர்.
மார்ச் 21ம் தேதி வரை அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜாராமன் 10 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கொலைகளைச்செய்தார் என்று போலீசார் கூறுகின்றனர்.
பல வருடமாக தலைமறைவாக இருந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னையில் கைது செய்யப்பட்டார்.இவர் மீது பல கொள்ளை, மிரட்டல், கடத்தல் வழக்குகளும் உள்ளன. தனது இயக்கத்துக்குத் தேவையான நிதிதிரட்டுவதற்காக இவர் இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
தன்னை போலீசார் மிருகத்தனமாக நடத்துவதாக நீதிபதியிடம் ராஜாராமன் புகார் கூறினார். மேலும் தன் மீது பல பொய் வழக்குகளைஜோடித்து வருவதாகவும் இதனால் மனித உரிமைக் கமிஷனிடம் புகார் தர அனுமதிக்க வேண்டும் என்றும் ராஜாராமன் கோரியுள்ளார்.
-->