இந்தியாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி: 2 ஜெர்மன் வியாபாரிகள் கைது
Subscribe to Oneindia Tamil
பெர்லின்:
இந்தியாவுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த 2 ஜெர்மனி வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாலம் கட்டும் பணிகளில் ஈடுபடும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஹைடிராலிக்சிலிண்டர்களை அந்த இரண்டு பேரும் சட்ட விரோதமாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 1997 முதல் 2000ம் ஆண்டு வரை ஒன்பது முறை இதுபோன்ற ஹைடிராலிக் சிலிண்டர்களைஅவர்கள் கடத்தியுள்ளனர்.
ஜெர்மனி சட்ட விதிமுறைகளை மீறி இவற்றை ஏற்றுமதி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள அந்தஇருவரின் பெயர்களும் அவர்களுடைய நிறுவனத்தின் பெயரும் வெளியிடப்படவில்லை.
இந்தியாவின் தொலை தூர ஏவுகணையான அக்னி ஏவுகணைகளில் இந்த ஹைடிராலிக்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications