பொடா: 12ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம்
சென்னை:
பொடா சட்டம் தொடர்பாக விவாதிப்பதற்காக வரும் 12ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட்டியுள்ளது திமுக.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன்உள்ளிட்டவர்கள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை திமுக தலைவர் கருணாநிதிஉள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
வைகோ கைதைக் கண்டித்து சில மாதங்களுக்கு முன் மதிமுகவினர் நடத்திய ஒரு கோடி கையெழுத்துஇயக்கத்தில் கருணாநிதிதான் முதலில் கையெழுத்துப் போட்டார்.
இந்தக் கையெழுத்து இயக்கத்தின் படிவங்களை ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமிடமும், பிரதமர்வாஜ்பாயிடமும் மதிமுக தலைவர்கள் சமர்ப்பித்தனர். வைகோ கைது தொடர்பாக உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதற்கிடையே பொடா சட்டத்தில் உள்ள சில விதிகளை நீக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் வைகோ. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய பொடா சட்டம் குறித்து பா.ஜ.க. உள்ளிட்ட கட்சித் தலைவர்களுடன்விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என்று சமீபத்தில் கருணாநிதி கூறியிருந்தார்.
அதன்படி இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு பொடா சட்டம் தாக்கல் செய்யப்படும்போதே பல கட்சிகளும்அதைக் கடுமையாக எதிர்த்தனர். சில மாநில அரசுகள் பொடா சட்டத்தைத் தவறாகப்பயன்படுத்தலாம் என்றும் பல எம்.பிக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் அதையும் மீறி பொடா சட்டம் கொண்டுவரப்பட்டது.
அரசியல் எதிரிகளைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தை ஆளும் அதிமுக அரசுபொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி வைகோ, நெடுமாறன் உள்ளிட்டவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது.
பொடா சட்டம் தொடர்பாக விவாதிப்பதற்காக வரும் 12ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைசென்னையில் திமுக கூட்டியுள்ளது. இதில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று அவ்வறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
வைகோ, நெடுமாறன் உள்ளிட்டவர்கள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதைக்கண்டித்து இந்தக் கூட்டத்தின்போது பல்வேறு போராட்டங்களுக்கான அறிவிப்புகள்வெளியிடப்படும் என்று தெரிகிறது.
-->