அமெரிக்க வேன் விபத்தில் இந்திய மாணவன், மாணவி பலி
பெளவ்மேன் (அமெரிக்கா):
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் வேகமாகச் சென்று கொண்டிருந்த வேன்தலைகீழாகக் கவிழ்ந்ததில் அங்கு படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த மாணவனும் மாணவியும்தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தனர்.
கிரீன்ஸ்போரோவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 7 இந்தியமாணவ, மாணவிகள் வார இறுதியைக் கொண்டாடுவதற்காக நேற்று காலை புளோரிடாவில் உள்ளடேய்டோனா பீச்சுக்கு சிறிய வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று நிலை தடுமாறிய அந்த வேன் தலைகீழாகக் கவிழ்ந்து பல மீட்டர் தூரத்திற்குஇழுத்துச் செல்லப்பட்டது.
இந்த விபத்தில் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் வேனிலிருந்து ஆறு மீட்டர் தூரத்திற்கு அப்பால்வீசி எறியப்பட்டனர். இருவரும் சீட் பெல்ட்டுகளை அணியவில்லை என்று தெரிகிறது.
அவர்கள் இரண்டு பேருக்குமே 24 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
வேனில் பயணம் செய்த வேறு மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில்தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சியாகிருஷ்ணா தீகாலா என்பவர் உயிருக்குப்போராடிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
உமாதேவி கல்லேம்திரேச்சி மற்றும் காயத்ரி ஸ்ரீதரன் ஆகியோரும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications