"மஞ்சள் காமாலை" பிடியில் மதுரை குழந்தைகள்
மதுரை:
மதுரை மாநகரில் குழந்தைகளிடையே மஞ்சள் காமாலை நோய் வேகமாகப் பரவி வருகிறது.
கோடை காலம் துவங்கி விட்டாலே குழந்தைகளுக்கு மிகுந்த கஷ்டமாகி விடும். கோடை காலத்தில்பல்வேறு நோய்கள் வந்து, குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களையும் சிரமப்படுத்தும்.
அந்த வகையில் தற்போது மதுரையில் கடும் வெப்பம் நிலவுவதால், மஞ்சள் காமாலை நோய்வேகமாகப் பரவி வருகிறது. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள்மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலப் பிரிவு தலைவரானடாக்டர் ராஜகோபால் கூறுகையில்,
கடந்த ஒரு வாரத்தில் குழந்தைகள் நலப் பிரிவுக்கு வந்திருந்த குழந்தைகளில் ஒரு சதவீதம் பேருக்குமஞ்சள் காமாலை அறிகுறிகள் இருந்தன. சுமார் 15 குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை நோயின்தாக்கம் இருந்தது.
இது வழக்கத்தை விட அதிகமான எண்ணிக்கை ஆகும். நேற்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக்கொண்டுவரப்பட்ட 840 குழந்தைகளில் 6 பேருக்கு மஞ்சள் காமாலை இருந்தது தெரிய வந்தது.
அசுத்தமான தண்ணீர், அதிகரித்த வெப்பம், சூடு போன்றவையே இதற்கு முக்கியக் காரணங்கள்.ஐஸ்கிரீம் சாப்பிடுவது, பாதுகாப்பில்லாத குடிநீரைக் குடிப்பது, சாலைகளில் விற்கும்திண்பண்டங்களை வாங்கிச் சாப்பிடுவது ஆகியவற்றைக் குழந்தைகள் தவிர்க்க வேண்டும்.
அதற்குப் பதிலாக காய்ச்சி வடிக்கப்பட்ட தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். நிறைய பழங்கள்சாப்பிட வேண்டும் என்றார் டாக்டர் ராஜகோபால்.
-->