தேசிய கொடி: கிரிக்கெட் ரசிகர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்
சென்னை:
பெரியாரை விமர்சிக்கத் தான் ரஷ்ய முட்டாளைத் தேடிப் பிடித்து அவனைப் பற்றிய கதை கூறியுள்ளார்ஜெயலலிதா என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலியில் கருணாநிதி எழுதியுள்ள கடித விவரம்:
ரஷ்யாவில் கடவுள் இல்லை என்று மறுத்துப் பேசும் முட்டாள் இருந்தான் என்று கூறி பெரியாரை விமர்சிக்கஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா. கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று கல்லில் செதுக்கச் சொல்லியபெரியாரையும் அப்படி செதுக்கி வைத்தவர்களை கண்டிப்பதற்கும் ஒரு அளவு இருக்கிறது.
நாத்திக வாதத்துக்கு எதிராக ஆத்திக வாதத்தை வைக்கலாம். அது ஆரோக்கியமான விவாத முறை.அதைவிட்டுவிட்டு ரஷ்ய முட்டாள் ஒருவனைத் தேடிப்பிடித்து, அவனை முன்னிறுத்தி ஜெயலலிதா தன் அதிகாரஆணவைத்தைக் காட்டியிருக்க வேண்டியதில்லை.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வரும் பார்யாைளர்களிடம் சிக்கி அந்தந்த நாட்டுக் கொடிகள்பட்டுவரும் பாட்டைப் பார்த்தால் வேதனையாக உள்ளது. சிலர் கொடியையே அப்படியே சட்டையாக போட்டுவருகின்றனர். இன்னும் சிலர் அதை குல்லாய் போல மடித்து மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தேசியக்கொடியை தாங்களையம் அறியாமலேயே ரசிகர்கள் அவமதித்து வருவதைத் தடுக்க வேண்டும் எனறுஎழுதியுள்ளார் கருணாநிதி.
-->