For Daily Alerts
Just In
காஞ்சியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: மக்கள் அவதி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் பெட்ரோல், டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும்அவதிக்குள்ளாயினர்.
காஞ்சிபுரம் நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலைமுதல் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வாகனதாரர்கள் கடும்அவதிக்குள்ளாகினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சென்னை கொருக்குப்பேட்டைப் பகுதியில் உள்ள பெட்ரோலியசேமிப்புக் கிடங்குகளில் இருந்து தான் பெட்ரோல், டீசல் செல்கிறது.
ஆனால், கொருக்குப்பேட்டை பகுதியில் நடந்த திடீர் லாரி ஸ்டிரைக் காரணமாக பெட்ரோல், டீசல்வினியோகிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் பெட்ரோல், டீசல் ஸ்டாக் தீர்ந்து,மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
-->
Comments
Story first published: Tuesday, March 11, 2003, 5:30 [IST]