திமுக கூட்டத்தை புறக்கணிக்கும் விடுதலை சிறுத்தைகள்
பாண்டிச்சேரி:
பொடா சட்டத்துக்கு எதிராக திமுக கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாகவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
பாண்டிச்சேரியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
நாங்கள் இந்தச் சட்டத்தை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தினோம். அப்போது திமுகவும், மதிமுக, பாட்டாளிமக்கள் கட்சி ஆகியவை அந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு கூட தெரிவிக்கவில்லை. மேலும் இந்தக் கட்சிகளின்ஆதரவுடன் ஆட்சியில் உள்ள மத்திய அரசு தான் பொடா சட்டத்தைக் கொண்டு வந்தது.
அப்போது கூட இந்த இரு கட்சியினரும் இச் சட்டத்தை எதிர்க்கவில்லை. முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்இருந்து திமுகவும் மதிமுகவும் வெளியேறட்டும். அதன் பின்னர் பொடா சட்டத்துக்கு எதிராக போராட்டம்நடத்தலாம்.
அதை விட்டுவிட்டு ஆட்சியிலும் இருந்து கொண்டு பொடா சட்டத்துக்கு எதிராக அனைத்துக் கட்சிகளைக் கூட்டிஎன்ன பேசப் போகிறார்கள் திமுகவினர்?
அதே நேரத்தில் சென்னையில் திமுக கூட்டியுள்ள பொடா எதிர்ப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க. அரசைக்கண்டித்து தீர்மானம் போட்டால் அதை வரவேற்போம் என்றார் திருமாவளவன்.
-->