For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவில் சிலை சேதம்: பெரியகுளம் அருகே பதற்றம்

By Staff
Google Oneindia Tamil News

தேனி:

தேனி மாவட்டம் பெரியுகுளம் அருகே கைலாசநாதபுரம் கோவிலில் சாமி சிலை, பீடம் ஆகியவைசில விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கைலாசநாதபுரம் பகுதியில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த 1000 ஆண்டு பழமையான கைலாசாநபுரம்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குள் அதிகாலையில் புகுந்த சில விஷமிகள் சிவலிங்கம், பீடம்,சூலாயுதம் போன்றவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர்.

காலையில் கோவிலைத் திறந்தபோது தான் இது குறித்த விவரம் தெரியவந்தது. உடனே கோவில்குருக்கள் அலறி அடித்துக் கொண்டு ஊர் மக்களிடம் விவரத்தைச் சொன்னார்.

உடனே ஆயிரக்கணக்கான மக்கள் கோவில் அருகே கூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி மல்லையா போலீசாரிடம் புகார்கொடுத்துள்ளார்.

தகவல் அறிந்தவுடன் போலீசார் விரைந்து வந்து கூட்டத்தைக் கலைந்து போகச் செய்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் பரவியதையடுத்து பெரியகுளம் நகர் முழுவதுமே பதற்றம் நிலவுகிறது.

போலீசார் அங்கு உஷார் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X