கேஸ் சிலிண்டர் வெடித்து தாய், தந்தை, மகன்கள் படுகாயம்
கோவை:
கோவை அருகே உள்ள கணபதி என்ற இடத்தில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த4 பேர் படுகாயமடைந்தனர்.
கணபதி பகுதியில் உள்ள கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரும், இவரது மனைவி சித்ரா,மகன்கள் கருப்பையா, ராஜா ஆகியோரும் இரவில் கேஸ் சிலிண்டரை சரியாக ஆப் செய்யாமல் தூங்கினர்.இதனால் வீடு முழுவதும் கேஸ் பரவியது.
காலையில் பால் காய்ச்சுவதற்காக சித்ரா அடுப்பைப் பற்ற வைத்துள்ளார். அப்போது பெருத்த சப்தத்துடன்சிலிண்டர் வெடித்தது. அந்த அறைமுழுவதும் தீப்பிடித்துக் கொண்டது. இதில் சித்ராவுக்கு பலத்த தீக் காயம்ஏற்பட்டது.
லட்சுமணனும், அவரது இரு மகன்களும் சித்ராவைக் காப்பாற்ற முயன்றபோது அவர்களுக்கும் தீக்காயம்ஏற்பட்டது. இதையடுத்து நான்கு பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சித்ராவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது.
-->












Click it and Unblock the Notifications