For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேக் பெஞ்ச் திமுகவினரால் சட்டசபையில் தொல்லை: காளிமுத்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சட்டசபையில் ஒரு பிரிவு திமுக எம்.எல்.ஏக்கள் கட்டுப்பாடில்லாமல் செயல்படுவதாகவும் அவர்களை பிறதிமுகவினர் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்றும் சபாநாயகர் காளிமுத்து கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பரிதிஇளம்வழுதியை பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும்நீக்கி வைக்கும் தீர்மானத்தை சட்டமன்றம் தான் நிறைவேற்றியது. அதை நான் ரத்து செய்ய முடியாது.

இருப்பினும் பல்வேறு எதிர்க்கட்சிகளும் அவரை மீண்டும் அவையில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்திருப்பதால் அவையில் அது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும்.

திமுக எம்.எல்.ஏக்களில் பின்வரிசை உறுப்பினர்களான பொன்முடி, பரிதி ஆகியோர் கட்டுப்பாடின்றிசெயல்படுகிறார்கள். அவர்களை முன் வரிசையில் அமர்ந்திருக்கும் மூத்த உறுப்பினர்கள் (அன்பழகன்,துரைமுருகன், ஆற்காடு வீராசாமி) கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.

இந்த பின் வரிசை திமுகவினர் சபையில் எந்த உறுப்படியான காரியத்தையும் செய்வதில்லை. அவைக் குறிப்பில்நீக்கப்பட்ட பகுதிகளை சில எம்.எல்.ஏக்கள் வெளியில் சென்று பேட்டியாகத் தருகின்றனர். அதை சில டிவிக்களும்ஒளிபரப்புகின்றன. இந்தப் பழக்கத்தை உறுப்பினர்களும் டிவிக்களும் கைவிட வேண்டும். இதை ஒருவேண்டுகோளாகச் சொல்கிறேன்.

இல்லாவிட்டால் அவர்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன் என்றார் காளிமுத்து.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X