கேரள விபத்தில் இறந்த தமிழக தொழிலாளர் குடும்பத்துக்கு ஜெ. நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கேரள மாநிலம் ஆலுவாவில் வேன் மோதியதில் பலியான 3 தமிழக தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும்நிவாரண நிதியாக ரூ.50,000 வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
எர்ணாகுளத்தின் அருகே இச் சம்பவம் நடந்தது. விபத்தில் பலியான பழனி, பச்சையப்பன் ஆகிய இருவரும்மதுரையையும் முத்து என்பவர் கொடைக்கானலையும் சேர்ந்தவர்கள். கேரளத்தில் கூலி வேலை செய்து வந்தனர்.
இவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10,000 நிவாரண நிதியாகத் தரப்படும் என கேரள முதல்வர் ஆண்டனியுமஅறிவித்துள்ளார். இந் நிலையில் தமிழக அரசின் நிதியுதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 பேரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இதற்கிடையே அரசின் நலத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக ஜெயலலிதா நாளை முதல் தென்மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
-->












Click it and Unblock the Notifications