சக்கைப் போடு போடும் கருணாநிதியின் "தொல்காப்பிய பூங்கா": 4வது பதிப்பு ரெடி
சென்னை:
தன்னுடைய "தொல்காப்பியப் பூங்கா" நூலின் 4வது பதிப்வை வெளியிடுவதற்காக திமுக தலைவர் கருணாநிதிவரும் 22ம் தேதி திருச்சி செல்கிறார்.
சமீபத்தில் "தொல்காப்பிய"த்திற்கு உரை எழுதினார் கருணாநிதி. அதன் முதல் பதிப்பு சென்னையிலும், இரண்டாவதுபதிப்பு மதுரையில் வெளியிடப்பட்டன. இந்த இரண்டு பதிப்புகளுமே லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்றுத் தீர்ந்துவிட்டன.
இதைத் தொடர்ந்து மூன்றாவது பதிப்பின் விற்பனையும் தற்போது சூடுபிடித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில்தற்போது நான்காவது பதிப்பும் கண்டுள்ளது "தொல்காப்பியப் பூங்கா".
இந்த நான்காவது பதிப்பை திருச்சியில் வெளியிடுகிறார் கருணாநிதி. இதற்காக 22ம் தேதி திருச்சி செல்கிறார் அவர்.
அன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழறிஞர் மா. நன்னன் நூலை வெளியிடுகிறார். கே.சி.பழனிச்சாமி, கண்ணப்பன் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.
கார்க்கி எழுதிய "தாய்" ரஷ்ய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை எழுதுவதற்காக கருணாநிதி இன்றுகொடைக்கானல் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->