தீப்பெட்டி தொழிற்சாலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சூரங்குடி என்ற இடத்தில் தீப்பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலையில்ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உடல் கருகி இறந்தார். மேலும் ஒரு பெண் உள்பட இருவர் பலத்தகாயமடைந்தனர்.
தீக் குச்சித் தயாரிக்கத் தேவையான ரசாயன பொருள்களை ஒரு ஊழியர் கலக்கிக்கொண்டிருந்தபோது திடீரென அது வெடித்தது. இதில் அவரது கால் முழுவதுமாகக் கருகியது.
இதைப் பார்த்த இன்னொரு ஊழியர் அவரைக் காப்பாற்ற அங்கு சென்றார். ஆனால், தீ வேகமாகப்பரவியதால் அவரது உடலில் தீப் பிடித்துக் கொண்டது. சிறிது நேரத்தில் அவர் உடல் கருகி இறந்தார்.
இன்னொரு பெண் ஊழியரும் இச் சம்பவத்தில் பலத்த காயமடைந்தார்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications