கோவிலுக்குள் புதைந்திருந்த 19 பஞ்சலோக சிலைகள் மீட்பு
காரைக்கால்:
பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே கோவில் வளாகத்தில் புதைந்திருந்த 16 பஞ்சலோக சிலைகள்மீட்கப்பட்டன.
காரைக்கால் அருகே உள்ள அகலன்கன்னு கிராமத்தில் மிகப் பழமையான வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது.இந்தக் கோவிலில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக கோவில் வளாகத்தில் உள்ள ஒரு பகுதியைத் தோண்டிக் கொண்டிருந்தபோது இந்த சிலைகள் கிடைத்தன.
மொத்தம் 16 சிலைகள் புதையுண்டு இருந்தன. இவற்றில் 2 விநாயகர் சிலைகள், 2 சிவன் சிலைகளும் அடங்கும்.இந்தச் சிலைகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பது குறித்து ஆராய்வதற்காக தொல்பொருள் துறையினரிடம்ஒப்படைக்கப்பட உள்ளன.
சிலை திருடிய ஐவருக்கு சிறை:
இதற்கிடையே, அரியலூர் அருகே கோவில் சிலைகளைக் கொள்ளையடித்துச் சென்ற 5 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் அருகே உள்ள மிகவும் பழமையான ஸ்ரீவேதநாராயணன் கோவிலில் கடந்த 1986ம் ஆண்டு 8 பேர் கொண்ட கும்பல்நுழைந்து அங்கிருந்த ஸ்ரீதேவி, பெருமாள் ஆகியோரின் வெண்கலச் சிலைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் 8 பேரையும் கைது செய்தனர். விசாரணையின்போதே 3 பேர் இறந்துவிட்டனர்.மற்ற 5 பேருக்கும் அரியலூர் நீதிமன்றத்தில் தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications