ஹாவாலா பணம் ரூ.20 லட்சத்துடன் மூவர் கைது
சென்னை:
சென்னையில் ரூ.20 லட்சம் பணத்துடன் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வால்டாக்ஸ் சாலை- ஐசக் சாலை சந்திப்பில் சந்தேகததிற்கிடமான வகையில் 3 பேர்திரிந்தனர். அவர்களது கையில் சூட்கேசும் இருந்தது.
இந்த மூவரையும் அந்தப் பகுதியில் ரோந்து சென்ற போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களதுபெயர் ஜெயந்திலால், ராமு, வாசு என்று தெரியவந்தது. இதில் வாசு ராமுவின் மகன் என்றும்தெரிந்தது.
விசாரணையில் மூவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசவே அவர்களது பெட்டியைபரிசோதித்தனர். பெட்டி நிறைய நூறு ரூபாய் கட்டுக்கள் இருந்தன. மொத்தம் ரூ. 20 லட்சம்இருந்தது. கட்டுக்களின் மேல் பேப்பர்கள் சுற்றப்பட்டு அதில் ஏதோ ரகசிய முத்திரையும்குத்தப்பட்டிருந்தது.
பணம் குறித்து கேட்டபோது தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் ஆந்திர மாநிலம்
நெல்லூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இந்தப் பணத்தைக் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்தனர்.
சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள கே.பி. என்பவரிடம் இந்தப் பணத்தைக்கொடுத்துவிடுமாறு சுரேஷ் கூறியதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.
இது ஹாவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்படும் பணம் என்று தெரிகிறது. இதையடுத்து இந்தமூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சுரேஷையும் கே.பி. என்பவரையும் கைது செய்யும் முயற்சிகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.
-->