மும்பை ரயிலில் குண்டு வெடிப்பு: 12 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மும்பை புறநகர்ப் பகுதிக்கு வந்து சேர்ந்த ஒரு ரயிலில் வைக்கப்பட்டிருந்த ஒரு வெடிகுண்டுபயங்கரமாக வெடித்துச் சிதறியதில் 2 பெண்கள், 2 பெண் போலீசார் உள்பட 12 பேர்உயிரிழந்தனர். மேலும் 65 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து கர்ஜத் என்ற இடத்திற்கு நேற்று இரவு ஒரு ரயில்கிளம்பிச் சென்றது.

அந்த ரயில் இரவு சுமார் 8 மணிக்கு முனுந்த் ரயில் நிலையத்தைச் சென்று சேர்ந்த போது அதிலிருந்தபெண்கள் முதல் வகுப்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு பயங்கரச் சத்தத்துடன்வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இவர்களில் 2 பெண் போலீசார் உள்பட 4 பேர்பெண்கள் ஆவர்.

மேலும் சுமார் 65 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் முனுந்த்மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரயில் நிலைய பிளாட்பாரங்களில் நின்று கொண்டிருந்தபல பயணிகளும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்தனர்.

இந்தக் குண்டு வெடிப்பில் அந்தப் பெண்கள் பெட்டியின் மேற்கூரை தனியாகக் கழன்று விழுந்தது.மேலும் மூன்று பெட்டிகள் கடுமையாகச் சேதம் அடைந்தன.

இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. வெடித்த குண்டுபயங்கரமான ஆர்.டி.எக்ஸ். வகையைச் சேர்ந்ததாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்து சரியாக 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதைத்தொடர்ந்து மும்பை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் இந்தப்பாதுகாப்புகளையும் மீறி தற்போது குண்டு வெடிப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குண்டு வெடிப்பு ஒரு தீவிரவாதத் தாக்குதல்தான் என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் மும்பையில் நடைபெறும் நான்காவது குண்டு வெடிப்புச் சம்பவம் இதுஎன்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மும்பைக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்துசெய்யப்பட்டன. மும்பை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதேபோல் டெல்லி உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், விமானநிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மும்பையில் ஒரு பஸ்சில் பை ஒன்று அநாதையாகக் கிடந்தது பெரும் பதற்றத்தைஏற்படுத்தியது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அதைச் சோதனையிட்டபோது அதில்துளையிடும் மெஷின் இருப்பது தெரிய வந்தது. அந்தப் பையின் சொந்தக்காரர் பின்னர் அங்குவந்து அதைப் பெற்றுக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+