For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"தாய்" மொழிபெயர்ப்புக்காக கொடைக்கானல் சென்றார் கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி எழுதிய "தாய்" காவியத்தை கவிதை நடையில் மொழிபெயர்த்துஎழுதுவதற்காக திமுக தலைவர் கருணாநிதி கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார். ஒரு வாரம் வரைஅங்கு தங்கியிருந்து "தாய்" கவிதை வடிவத்தை முடித்து விட்டு சென்னை திரும்புகிறார்.

சமீபகாலமாக இலக்கியத்தின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார் கருணாநிதி.தொல்காப்பியத்திற்கு எளிய நடையில் உரை எழுதி, "தொல்காப்பியப் பூங்கா" என்று அதற்குப்பெயரிட்டு சமீபத்தில் வெளியிட்டார் அவர்.

பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ள அந்த நூல் வெளியிட்ட சில நாட்களுக்குள்ளாகவே நான்குபதிப்புகளைக் கண்டுவிட்டது.

இதைத் தொடர்ந்துதான் "தாய்" நூலை தமிழில் கவிதை நடையில் மொழிபெயர்த்து வெளியிடகருணாநிதி முடிவு செய்துள்ளார்.

சென்னையில் அமைதியாக உட்கார்ந்து எழுத முடியாது என்பதால் கொடைக்கானல் சென்றுமொழிபெயர்ப்பில் ஈடுபட முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து ரயில் மூலம் நேற்று கருணாநிதிகொடைக்கானலுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அவருக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஏராளமான திமுகவினர் உற்சாகமான வரவேற்புஅளித்தனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவர் கொடைக்கானலுக்குச் சென்றார். வழியில் கவிஞர்வைரமுத்துவின் பண்ணை வீடு உள்ள கெங்குவார்பட்டியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர்கொடைக்கானல் சென்றார் கருணாநிதி.

வரும் 21ம் தேதி வரை அங்கு தங்கியிருந்து நூலை எழுதி முடித்துவிட்டு அதன் பிறகே அவர்சென்னை திரும்புகிறார்.

கொடைக்கானலில் இருக்கும்போது யாரும் தன்னை வந்து சந்திக்க வேண்டாம் என்றுதிமுகவினருக்கு கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X