தமிழகத்தில் "புலிகள்" நடமாட்டம் இல்லை: அரசு
சென்னை:
தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதாக தமிழக அரசின்தலைமைச் செயலாளரான லட்சுமி பிரானேஷ் கூறியுள்ளார்.
சென்னையில் "சிவில்-மிலிட்டரி லையேசன்" மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் பேசுகையில்,
தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தவிர்ப்பதற்கு மாநிலப் போலீசார் மற்றும் முப்படையினரின்கூட்டு முயற்சிகள் எந்த அளவுக்குத் தேவை என்பதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
இந்தியக் கடற்படையினரின் முழு ஒத்துழைப்புடன் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளவிடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை தமிழகப் போலீசார் முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இயற்கைச் சீற்றங்களின்போது தீயணைப்புப் படை வீரர்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் சிறப்பாகஉதவி வருவதையும் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். முன்னாள் ராணுவத்தினருக்கும்அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தேவையான பல நலத் திட்டங்களை தமிழக அரசு அமலாக்கிவருகிறது என்றார் லட்சுமி பிரானேஷ்.
இந்த மாநாட்டில் தமிழக டி.ஜி.பி. ராஜகோபாலன் மற்றும் முப்படைகளைச் சேர்ந்த உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-->












Click it and Unblock the Notifications