மனைவியைக் கொன்ற ராணுவ வீரர்
தேனி:
தேனி அருகே மனைவியை கொடூரமாக அடித்துக்கொன்ற ராணுவ வீரரைப் போலீஸார் கைதுசெய்தனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சுக்கங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்.ராணுவத்தில் பணியாற்றி வரும் இவர், சில நாட்களுக்கு முன் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
ஊருக்கு வந்ததிலிருந்து சதீஷ்குமார் தன் மனைவி சோனியாவுடன் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டுப் படிக்கட்டில் விழுந்து இறந்த நிலையில் சோனியாவின் பிணம்கிடந்ததை அவருடைய உறவினர்கள் பார்த்தனர். இதைத் தொடர்ந்து சோனியாவின் தந்தைக்குத்தகவல் தரப்பட்டது.
விரைந்து வந்த அவர் இது தொடர்பாகப் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவுசெய்து சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சதீஷ்குமார்தான் சோனியாவைக்கொடூரமாக அடித்து, படிக்கட்டில் உருட்டி விட்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து சதீஷ்குமாரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவருடைய தந்தைபழனிச்சாமி, தாயார் நீதியாள், சகோதரர் பிரவீன்குமார் ஆகியோரையும் போலீஸார் கைதுசெய்தனர்.
-->