திருமாவளவன் போல பேசி பாதிரியார்களிடம் பண மோசடி
பாண்டிச்சேரி:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் மாதிரிப் பேசிபாண்டிச்சேரியில் உள்ள 2 பாதிரியார்களிடம் ரூ.15,000 பணம் மோசடி செய்த சென்னையைச்சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்தவர் ஜோசப் என்ற ரவி. இவர் பாண்டிச்சேரியில் உள்ள இமாகுலேட் கதீட்ரல்சர்ச் பிஷப்பிற்கு போன் செய்துள்ளார்.
திருமாவளவன் பேசுவதாகக் கூறிக் கொண்ட அவர் தனது கட்சியின் சார்பில் ஏழைகளுக்கு இலவசமூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப் போவதாகவு அந்த நிகழ்ச்சியில் பிஷப் கலந்து கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் தன்னால் விழாவில் கலந்து கொள்ளமுடியாத நிலை உள்ளதாக பிஷப் கூறியுள்ளார்.அப்படியென்றால் மூன்று சக்கர சைக்கிள்கள் வாங்க நிதியுதவி செய்யுமாறு ரவி கேட்டுள்ளார. அதைபிஷப் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து ரவி என்ற ஜோசப்பை நேரில் அனுப்புவதாகவும் அவரிடம் செக் கொடுத்துஅனுப்புமாறும் கூறியுள்ளார் "திருமாவளவன்".
சிறிது நேரத்தில் பிஷப்பிடம் சென்ற ரவி அவர் கொடுத்த ரூ.10,000க்கான செக்கை வாங்கிக்கொண்டு சென்றார்.
இதே டெக்னிக்கைப் பயன்படுத்தி அந்தோணிச்சாமி என்ற பாதிரியாரிடமும் ரூ. 5000வாங்கியுள்ளார் ரவி.
பணம் வந்து சேர்ந்ததா என்பதைத் தெரிந்து கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தைஇரு பாதிரியார்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தான் மோசடி நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரும் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் தீவிர விசாரணை நடத்தி ரவி என்றஜோசப்பைக் கைது செய்தனர்.
-->












Click it and Unblock the Notifications