For Daily Alerts
Just In
மனைவியின் உடலை மருத்துவமனைக்கு அர்ப்பணித்த கணவர்
வேலூர்:
வேலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தபால்துறை ஊழியரான நாகலிங்கம் தனது மனைவியின் உடலைவேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்குத் தானம் செய்தார்.
வேலூர் பெரிய அல்லாபரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகலிங்கத்தின் மனைவி ராணி. இவர்வியாழக்கிழமை மரணமடைந்தார். இதையடுத்து ராணியின் கண்களை அவர் விரும்பியபடிதானமாகக் கொடுத்தார் நாகலிங்கம்.
பின்னர் அவரது உடலையும் தானமாகக் கொடுக்க முடிவு செய்தார். அது குறித்து வேலூர் சி.எம்.சி.மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசினார். ராணியின் உடலை ஏற்கஅவர்கள் முன் வந்தனர்.
இதைத் தொடர்ந்து பெரிய அல்லாபுரம் பகுதியினர் ஊர்வலமாக ராணியின் உடல் எடுத்துச் சென்றுவேலூர் சி.எம்.சி. மருத்துவமனையிடம் ஒப்படைத்தனர்.
-->
Comments
Story first published: Saturday, March 15, 2003, 5:30 [IST]