பாண்டிச்சேரி அருகே மீனவர்கள் மோதல்: 7 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அருகே இரு பிரிவு மீனவர்களுக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் 7 பேர்படுகாயமடைந்தனர்.
பாண்டிச்சேரி- கடலூர் சாலையில் நல்லவேடு மற்றும் பன்னித்திட்டு ஆகிய கடலோரக்கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கிடையே இந்த திடீர் மோதல் ஏற்பட்டது.
கடலில் மீன் பிடிக்கும்போது ஏற்பட்ட வாக்குவாதம் கரைக்குத் திரும்பியதும் மோதலாக மாறியது.
இந்த மோதலில் 20 படகுகள் அடித்து உடைக்கப்பட்டன. 20 குடிசைகளுக்கு தீவைக்கப்பட்டது.வாள்கள், அரிவாள்களால் மீனவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டனர்.இதில் 7 பேருக்கு மிக பலத்த காயம் ஏற்பட்டது.
இச் சம்பவத்தையடுத்து அங்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications