ஆடம்பர அரசு விழாக்கள்: வெள்ளை அறிக்கை கோருகிறார் நல்லகண்ணு
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
மாவட்டந்தோறும் ஆடம்பரமாக நடத்தப்பட்டு வரும் அரசு விழாக்கள் குறித்து முதல்வர்ஜெயலலிதா வெள்ளை அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட்செயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
இது தொடர்பாக தர்மபுரியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் நல்லகண்ணுபேசுகையில், அரசு விழாக்கள் மிகவும் ஆடம்பரமாகிவிட்டன. இதனால் மக்களின் வரிப்பணம்கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டு வருகிறது.
சாத்தான்குளம் இடைத்தேர்தல் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய தேர்தல் ஆணையம்கடுமையாகக் கண்டித்துள்ளது. எனவே, அதற்குப் பொறுப்பேற்று ஜெயலலிதா பதவி விலகவேண்டும். பதவியில் நீடிக்க அவருக்குத் தகுதி கிடையாது.
பொடா சட்டத்தின் கீழ் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பல மாதங்களாக சிறையில்வைக்கப்பட்டுள்ளார். அவரை உடனே அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
-->












Click it and Unblock the Notifications