For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார் மீது லாரி மோதி தீப் பிடித்தது: தலைமை ஆசிரியர், மனைவி, குழந்தை பலி

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

வேலூர் அருகே கார் மீது லாரி மோதியதில் இரு வாகனங்களும் தீப் பிடித்துக் கொண்டன. இதில் காரில் இருந்தகைக் குழந்தை, அதன் தாய், தந்தை மற்றும் காரின் டிரைவர் ஆகிய நால்வரும் உயிரிழந்தனர்.

நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது.திருப்பத்தூரைச் சேர்ந்தவர் காட்வின் பரமானந்தம். இவர் குனிச்சி என்ற ஊரில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

சென்னையில் நடந்து வரும் பெந்தகொஸ்தே மாநாட்டில் பங்கேற்பதற்காக தனது மனைவி டோரத்தி,3 வயது மகள்மெர்லின் ஆகியோருடன் டாடா சுமோ காரில் புறப்பட்டார். வேலூரை அடுத்த பொய்கைக் கிராமம் பகுதியில் கார்சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த லாரி தாறுமாறாக வந்தது. பயங்கர வேகத்தில் வேன் மீது மோதியது. இதில் கார்அப்பளமாய் நொறுங்கி தீப் பிடித்துக் கொண்டது. லாரியும் தீப் பிடித்துக் கொண்டது. இதில் காரில் இருந்தகாட்வின், டோரத்தி, மெர்லின் மற்றும் டிரைவர் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.

அந்த லாரி சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் பள்ளிகொண்டாவுக்குச் சென்று கொண்டிருந்தது. லாரி டிரைவர்அதி வேகத்தில் வந்தது தான் விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது. லாரியின் டிரைவர் லேசானகாயமடைந்தான். அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்

விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை வேலூர்மாவட்டக் கலெக்டர் மோகன்தாஸ் இன்று காலை பார்வையிட்டார்.

இப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X