அடுத்தடுத்து பிறந்த 9 "டெஸ்ட் டியூப்" குழந்தைகள்: பழனியில் சாதனை

Subscribe to Oneindia Tamil

பழனி:

பழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் உள்பட அடுத்தடுத்து 9சோதனைக் குழாய் குழந்தைகள் பிறந்துள்ளன.

இங்குள்ள கே.வி. மருத்துவமனையில் ஐஸ்வர்யா செயற்கை கருத்தரித்தல் மையம் உள்ளது. இங்குசோதனைக் குழாய் மூலம் குழந்தைகள் பெறுவதற்கான சிகிச்சை முறைகளை டாக்டர் சந்திரலேகாஅளித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குழந்தை பிறக்கவே வாய்ப்பு இல்லாத 20 பெண்களுக்குசோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற வைப்பதற்கான முயற்சிகளை டாக்டர் சந்திரலேகாமேற்கொண்டார்.

அதன்படி இவர்களில் 8 பெண்கள் கர்ப்பம் அடைந்தனர். அவர்களுக்கு சமீபத்தில் அடுத்தடுத்துபிரசவம் பார்த்தார் டாக்டர் சந்திரலேகா. 5 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் என மொத்தம் 9சோதனைக் குழாய் குழந்தைகள் பிறந்தன. ஒரு பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

சோதனைக் குழாய் முறையில் ஒரே சுற்றில் 9 குழந்தைகள் பிறந்துள்ளது மருத்துவத் துறையில்சாதனையாகக் கருதப்படுகிறது. அனைத்து குழந்தைகளும் இரண்டரை முதல் மூன்றரை கிலோஎடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக டாக்டர் சந்திரலேகா தெரிவித்தார்.

"சென்னையில் 15 முதல் 20 சதவீதம்தான் சோதனைக் குழாய் குழந்தைகளுக்கான முயற்சி வெற்றிபெறுகிறது. ஆனால் பழனியில் 40 சதவீதம் வெற்றி கிடைத்துள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம்இங்குள்ள மாசற்ற சுற்றுச் சூழல்தான்" என்றும் அவர் கூறினார்.

இந்தக் குழந்தைகளைப் பெற்ற பெண்களில் சிலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் குழந்தைபாக்கியமே இல்லாமல் தவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+