இலவச மின்சாரம் ரத்து: காவிரி டெல்டா விவசாயிகள் கடும் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து காவிரிடெல்டா விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மின்சாரக் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்ட அரசுவிவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தையும் ரத்து செய்துள்ளது. இவை இரண்டும் இன்று முதல்அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட காவிரி டெல்டாவிவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகம் காவிரியில் நீர் திறந்து விடாததாலும், பருவ மழை பொய்த்து விட்டதாலும் ஏற்கனவேகுறுவை மற்றும் சம்பா சாகுபடிகளை இழந்து விட்டதாகக் கூறும் விவசாயிகள், இந்த இலவசமின்சார ரத்து அறிவிப்பு தங்களை மேலும் பாதித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

எனவே இலவச மின்சார ரத்து அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே மின் கட்டண உயர்வையும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்துசெய்யப்பட்டதையும் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக காங்கிரஸ்செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

இன்று சென்னையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

சட்டசபையின் வரும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக தோழமைக் கட்சிகளுடன் கலந்துஆலோசித்து போராட்டம் தொடர்பான திட்டங்கள் அறிவிக்கப்படும்.

மேலும் அதிமுக அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளைக் கண்டித்து சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என்றார் இளங்கோவன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+