பெளர்ணமி விழா: தாம்பரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெளர்ணமி விழாவையொட்டி தாம்பரம்-திருவண்ணாமலை இடையே நாளை சிறப்பு ரயில்இயக்கப்படுகிறது.
நாளை மாலை 3.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் ரயில் இரவு 9 மணிக்குதிருவண்ணாமலையை அடையும்.
அதேபோல் திருவண்ணாமலையிலிருந்து நாளை மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு அந்த ரயில்கிளம்பி காலை 8.40க்கு தாம்பரம் நிலையத்தை வந்தடையும்.
செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர்ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications