தமிழக கடல் எல்லையில் ஊடுருவிய 19 இலங்கை மீனவர்கள்
தூத்துக்குடி:
தமிழக கடல் எல்லைக்குள் ஊடுருவிய 19 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களுடைய 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமேஸ்வரம், நாகப்பட்டனம் பகுதி மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடல் பகுதிக்குள் சென்றுவிடுவது போல தூத்துக்குடி அருகே உள்ள இந்திய கடல் எல்லைக்குள் அடிக்கடி இலங்கைமீனவர்கள் வந்து விடுவது உண்டு.
இலங்கை மீனவர்களின் ஊடுருவலைத் தடுப்பதற்காகக் கடலோரக் காவல் படையின் கப்பல்ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிறிது நாட்களாக அமைதியாக இருந்த இலங்கை மீனவர்கள் மீண்டும் ஊடுருவலைத்தொடங்கியுள்ளனர்.
தூத்துக்குடியிலிருந்து 60 கடல் மைல் தொலைவில் நான்கு படகுகளில் இலங்கை மீனவர்கள் 19 பேர்இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவி வந்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்ததும் இந்தியக்கடலோரக் காவல் படையினர் விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
அவர்கள் அனைவரும் தூத்துக்குடி கொண்டுவரப்பட்டு தெர்மல் நகர் காவல் நிலையத்தில்ஒப்படைக்கப்பட்டனர். அவர்களது நான்கு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
-->












Click it and Unblock the Notifications