For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானில் மேலும் ஒரு அல்-காய்தா தீவிரவாதி கைது

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின் லேடனின் அல்-காய்தா இயக்கத்தைச் சேர்ந்த மற்றொருமுக்கியமான தீவிரவாதி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளான்.

பின் லேடனின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் காலித் ஷேக் முகமது என்பவன் சிலநாட்களுக்கு முன் ராவல்பிண்டியில் கைது செய்யப்பட்டான். அவனுடன் வேறு இரண்டுஅல்-காய்தா தீவிரவாதிகளும் பிடிபட்டனர்.

இந்நிலையில் யாசிர் அல்-ஜசாரி என்ற மற்றொரு முக்கியமான அல்-காய்தா தீவிரவாதியைபாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். லாகூரில் நடத்தப்பட்ட சோதனையின்போது இவன்கைது செய்யப்பட்டான்.

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த யாசிர் லாகூரில் ஒரு வாடகை வீட்டில் பதுங்கி இருந்தபோது சிக்கிக்கொண்டான். அல்-காய்தா தலைவர்களில் 7வது இடத்தில் இருப்பவன் யாசிர் என்று கருதப்படுகிறது.

தீவிர விசாரணைக்குப் பின்னர் யாசிர் விரைவில் அமெரிக்க அதிகாரிகளிடம்ஒப்படைக்கப்படுவான். காலித் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இவன் பிடிபட்டுள்ளதாகத்தெரிகிறது.

இவனுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த குல்ஸெப் என்ற ஜாபர் என்ற தீவிரவாதியும் சோதனையின்போதுகைது செய்யப்பட்டான்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X