தமிழகத்தில் பெய்த கோடைமழை: மக்கள் மகிழ்ச்சி
தஞ்சாவூர்:
கோடை காலம் வாட்டி வதக்கி வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
தமிழகம் முழுவதிலும் கோடை வெயிலின் கொடுமை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வறட்சியால் வாடிக் கிடக்கும்தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
நன்னிலம், முத்துப் பேட்டை, மன்னார்குடி ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். இருப்பினும் இந்த மழையால் பெரிய அளவில் பலன் ஒன்றும் இருக்காது என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இது போல மழை பெய்தால் நல்லது என்றும் விவசாயிகள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.
இதேபோல சென்னையிலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று காலை லேசான மழை பெய்தது. அதிகாலை நேரத்தில் சில நிமிடநேரமே இந்த மழை பெய்ததால் பெரும்பாலான சென்னை மக்களுக்கு மழைபெய்ததே தெரியாமல் போனது.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ந்து அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பேச்சிப்பாறை,பெருஞ்சானி ஆகிய அணைகளில் நீர் மட்டம் 2 அடி அளவுக்கு உயர்ந்தது. இந்த மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவேஅவ்வப்போது கோடை மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications