For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடிநீர் பற்றாக்குறை: முதுமலை யானைகள் "டிரான்ஸ்பர்"

By Staff
Google Oneindia Tamil News

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் முதுமலை வன விலங்குகள் சரணாலயத்தில் நிலவும் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால்அங்கிருந்த 26 யானைகளும் அருகில் உள்ள மாயாறு ஆற்று மூங்கில் காட்டுப் பகுதிக்கு இடமாற்றம்செய்யப்பட்டுள்ளன.

முதுமலைக் காட்டுப் பகுதியில் கோடை காலம் காரணமாக கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.இதனால் சரணாலயம் மூடப்பட்டுள்ளது.

தண்ணீர் இல்லாத காரணத்தால் இந்தச் சரணாலயத்தில் உள்ள விலங்குகள் கடும் அவதியடைந்துள்ளன. குறிப்பாகயானைகளுக்கு பெரும் திண்டாட்டமாகப் போய்விட்டது.

முதுமலையில் 18 ஆண் யானைகள் உள்பட 26 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகள்தற்போது மாயாறு ஆற்றுப் பகுதியில் உள்ள மூங்கில் காட்டுப் பகுதிக்கு தற்காலிகமாக இடமாற்றம்செய்யப்பட்டுள்ளன.

குளிர்ச்சியான இந்தப் பகுதியில் யானைகள் செளகரியமாக இருக்கின்றன. நன்கு குளிக்கவும் ஆற்றுத் தண்ணீர்தாராளமாக இருப்பதால் யானைகளின் வெயில் கொடுமை பெருமளவில் தணிந்துள்ளது.

இந்த யானைகளின் பாகன்களும் இங்கேயே தங்கிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X