ஹைதர் அலி உள்பட 23 தீவிரவாதிகளுக்கு காவல் நீட்டிப்பு
மதுரை:
பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-உம்மா தீவிரவாதி இமாம் அலியின் கூட்டாளிகளா ஹைதர் அலிஉள்ளிட்ட 23 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை அருகே திருமங்கலத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் போலீஸாரைத் தாக்கி விட்டு இமாம் அலியும், ஹைதர்அலியும் தப்பிச் சென்றனர்.
சில நாட்களில் ஹைதர் அலி மட்டும் சிவகங்கையில் பிடிபட்டான். இமாம் அலி சிக்கவில்லை. பின்னர் சிலமாதங்களுக்கு முன் பெங்களூரில் ஒளிந்திருந்த இமாம் அலி உள்ளிட்ட ஐந்து தீவிரவாதிகளை தமிழகஅதிரடிப்படை போலீஸார் சுற்றி வளைத்துச் சுட்டுக் கொன்றனர்.
இமாம் அலி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக இருந்தபோது அவனுக்கு அடைக்கலம்கொடுத்ததாக 22 பேரை போலீஸார் கைது செய்திருந்தனர். அவர்கள் அனைவரும் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது நீதிமன்றக் காவல் முடிவடைவதையொட்டி, ஹைதர் அலி உள்ளிட்ட 23 பேரும் மதுரை முதலாவதுவிரைவு நீதிமன்ற நீதிபதி வெங்கடசாமி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அனைவரின் காவலையும் மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள்மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-->












Click it and Unblock the Notifications