For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈராக் கர்ப்பிணிகளின் அச்சம்

By Staff
Google Oneindia Tamil News

பாக்தாத்:

போர் அபாயம் காரணமாக ஈராக்கில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் சிசேரியர் ஆபரேசன் செய்து கொண்டு அவசரஅவசரமாகக் குழந்தைகளைப் பெற்று வருகின்றனர்.

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து விட்டால் அதன் பின்னர் மருத்துவமனைக்குச் சென்று பிரசவிக்க எந்தஅளவுக்கு வாய்ப்பு இருக்கும் என்று தெரியவில்லை. மேலும் மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகலாம்என்று அஞ்சப்படுகிறது.

அதனால் இப்போதே சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் நிறைமாத கர்ப்பிணிகள் குழந்தைகளைப் பெற்றுவருகின்றனர்.

"போர் ஆரம்பித்த பின்னர் பல இடங்களில் நிச்சயம் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும். அப்போது நிச்சயம்வீட்டை விட்டு வெளியேறவே முடியாது. அதனால்தான் இப்போதே குழந்தையைப் பெற்றுக் கொள்கிறேன்"என்றார் ஒரு பெண்.

போர் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்ற உத்தரவாதம் ஏதும் இல்லை என்பதால், ஏழு மாத கர்ப்பிணிகள் கூடமருத்துவமனைகளுக்குச் சென்று அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X