பொதுமக்களுடன் "ஹோலி" கொண்டாடிய வாஜ்பாய்
டெல்லி:
ஹோலிப் பண்டிகையையொட்டி பிரதமர் வாஜ்பாய் தன் இல்லத்தில் பொதுமக்களுடன் இதைக் கொண்டாடிமகிழ்ந்தார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஹோலிப் பண்டிகை பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாகவட இந்தியர்கள் இந்த விழாவை வண்ணமயமாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துன் கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கானமக்கள், குறிப்பாக இளைஞர்கள், ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளைத் தூவி ஹோலியைக்கொண்டாடினார்கள்.
ஹோலி கொண்டாட்டங்களையொட்டி டெல்லி நகரமே களை கட்டி இருந்தது. வாஜ்பாய் இல்லத்திலும் இன்றுசிறப்பு ஹோலி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவரும் இதில் கலந்து கொண்டார்.
தொழிலாளர் நலத் துறை இணை அமைச்சர் விஜய் கோயல் தலைமையிலான நடனக் குழுவினர் ராதா-கிருஷ்ணன்ஹோலி நடனம் ஆடுவது போல் ஆடிக் காட்டினர். வாஜ்பாய் இதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார்.
வாஜ்பாய்க்கு தீவிர பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு அவரைச் சுற்றிலும் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் நின்றுகொண்டிருந்ததால் அவர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் இடையே பெரும் "தள்ளு முள்ளு" ஏற்பட்டது.பிரதமரைப் புகைப்படம் எடுப்பதற்குள் பத்திரிக்கை போட்டோகிராபர்களுக்கும் போதும் போதும் என்றாகிவிட்டது.